அதிமுக முன்னாள் அமைச்சர் மீது  நடிகை பரபரப்பு புகார்

by Editor / 28-05-2021 04:44:06pm
 அதிமுக முன்னாள் அமைச்சர் மீது  நடிகை பரபரப்பு புகார்


 

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் தான் மணிகண்டன். ஆனால் முதல்வர் பழனிசாமி குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கருத்தால் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.. கேபிள் கட்டணத்தை குறைப்பது பற்றி முதல்வர் தன்னிடம் விவாதிக்கவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதே பதவி பறிப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது.. அதன்பிறகு மணிகண்டன் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.. 
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தன்னுடன் பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார் என்று அவர் மீது புகார் அளித்துள்ளார் சாந்தினி. மலேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி, நாடோடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள சொன்னால், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. மேலும் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னை பல முறை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகவும் சாந்தினி கூறியுள்ளார்.. மேலும் தான் கர்ப்பமான போது, கருவை கலைக்க வைத்து தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.அந்த வகையில் தன்னுடன் 5 ஆண்டுகள் தொடர்பில் இருந்த போது, ஆபாச புகைப்படங்களை எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாகவும் புகாரில் கூறியுள்ளார். எனவே மணிகண்டன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது வீடியோக்கள், புகைப்படங்களை அழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.. அமைச்ச்ர் மீது சாந்தினி அளித்துள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

 

Tags :

Share via