ரூ.55 லட்சம் கையாடல் ஊழியர், மனைவி உள்பட 3 பேர் கைது

by Editor / 25-06-2022 01:25:27pm
 ரூ.55 லட்சம் கையாடல்  ஊழியர், மனைவி உள்பட 3 பேர் கைது

மதுரை மீனாட்சிநகர் பகுதியில் தனியார் நிதி வசூல் நிறுவனம் இயங்கி வருகிறது. இது மதுரையில் உள்ள தனியார் நிறுவனங்களில், தினந்தோறும் பணத்தை வசூலித்து வங்கிகளில் செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கார்த்திக் விஜயன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த 17-ந்தேதி அன்றைய வசூல் தொகை ரூ. 55 லட்சத்துடன் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து நிதி நிறுவனம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தது. மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் விஜயன், தனது மனைவி அழகுராணியுடன் தலைமறைவானது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர். கார்த்திக் விஜயன் கோத்தகிரியில் மலைவாழ் மக்களுடன் பதுங்கி வசித்து வருவது தெரியவந்தது. மாநகர போலீசார் அங்கு சென்று கார்த்திக் விஜயன், மனைவி அழகுராணி மைத்துனர் ராஜேஷ்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் ரூ.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்த கார்த்திக் விஜயன், உடந்தையாக இருந்த மனைவி அழகுராணி, மைத்துனர் ராஜேஷ்குமார் ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via