மின்தடை காரணமாக பெண்ணுக்கு யுபிஎஸ் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த அவலம்

by Editor / 26-06-2022 02:06:44pm
மின்தடை காரணமாக பெண்ணுக்கு யுபிஎஸ் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த அவலம்


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா தலைமை மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இரவு மருத்துவர் நியமனம் ஆகியவற்றை உடனடியாக செய்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று இரவு இந்த மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மின்தடையால் பிரசவத்திற்கு வந்த பெண் ஒருவருக்கு பிரசவ அறையில் யூபிஎஸ் வெளிச்சத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. காலில் வெட்டப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு வந்தபோது சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் கும்பகோணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via