பதவி காலம் முடியும் வரை அதிபர் பதவியில் நீடிப்பேன்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில் எந்த சூழ்நிலையிலும் தவறு செய்திருந்தாலும் பதவி விலக மாட்டேன் என அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரசாயன உரங்களை பயன்படுத்த தடை விதித்து மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே நிதி உதவி கோருவது தமது தவறுதான் என்று அதிபர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். கடந்த கால ஆட்சியில் என்ன குறைபாடு இருந்தாலும் தற்போதைய பொருளாதார சவால்களை சிரமங்களை சமாளிப்பது தமது பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருள்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களின் கோபம் தனக்குப் புரிகிறது எனவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளதாகவும் கூறினார்.
Tags :