6 மாத குழந்தையை கடித்துக் கொன்ற எலிகள்.. பெற்றோர் கைது

by Staff / 23-09-2023 01:33:24pm
6 மாத குழந்தையை கடித்துக் கொன்ற எலிகள்.. பெற்றோர் கைது

அமெரிக்காவின் இண்டியானாவில் 6 மாத குழந்தையை எலிகள் கடித்துக் கொன்றுள்ளன. குழந்தையின் உடலில் 50க்கும் மேற்பட்ட எலி கடித்த காயங்கள் இருந்துள்ளன. ஆகஸ்ட் 13 அன்று, டேவிட் மற்றும் ஏஞ்சல் ஷோன்பாமின் 6 மாத குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது எலிகள் குழந்தையை கடித்துக் குதறியுள்ளன. இதில் குழந்தை படுகாயமடைந்து துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் வீடு முழுவதும் அசுத்தமாக இருப்பதை கண்டுபிடித்தனர். அலட்சியமாக இருந்த பெற்றோரும், குழந்தையின் அத்தையும் காவலில் வைக்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via