உண்மைக்குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் - சீமான்

by Staff / 14-07-2024 12:40:02pm
உண்மைக்குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் - சீமான்

விசாரணைக் கைதி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உண்மைக்குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கபட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண்டைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது நடந்த என்கவுண்டர் மூலம் அதிகமாகிறது என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via