யானை மிதித்து தோட்ட காவலாளி பலி.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமம் கண்ணப்பர் தெரு (வலையர் குடியிருப்பு) என்ற முகவரியில் வசித்து வந்த திரு. மூக்கைய்யா (வயது 60)என்பவர் வலையர் குடியிருப்பை ஒட்டி உள்ள சொக்கம்பட்டி ஊரில் வசித்து வரும் பிள்ளையார் என்பவரின் வாழைத்தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார் 12.07.2024 (வெள்ளி) நள்ளிரவு 12.00 மணியளவில் குடியிருப்பு பகுதியில் ஒட்டி உள்ள தோட்டத்திற்கு வந்த காட்டு யானை ஒன்று மூக்கையாவை தாக்கி மிதித்ததில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் இறந்த நபருக்கு பெருமாத்தாள் என்ற மனைவியும் ராக்கம்மாள் (1) குருவம்மாள் (2) ராமலட்சுமி (3) என்ற மூன்று பெண் மக்களும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும் சொக்கம்பட்டி காவல்துறையினரும் சென்று அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags : யானை மிதித்து தோட்ட காவலாளி பலி.