மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது

by Staff / 24-10-2024 04:11:03pm
மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது

குமரி, ராஜமங்கலம் அருகே 19 வயது மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை காதலித்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய புத்தளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தை (27) மகளிர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினந்தோறும் அதிகரித்து வருவதால் மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என் போலீசார் அறிவுரை வழங்கினர்.

 

Tags :

Share via