ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்கவுண்டர்
அண்மையில் பகுஜன்l சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறை எடுத்து விசாரித்து வருகின்ற நிலையில் ஆம்ஸ்ட்ராங்கொலை வழக்கில் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை விசாரணைக்காக களத்திற்கு அழைத்து சென்ற பொழுது அதிகாலையில் அவர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்துச் செல்லும் பொழுது காவல்துறையினால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் மீது பகுஜன்சமாஜ் கட்சி திருவள்ளுர் மாவட்ட செயலாளா் தென்னரசு கொலை உள்பட 5 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக செயல்பட்டது காவல்துறையால் கண்டறியப்பட்ட நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது... எம் .கே. பி.நகர் காவல் உதவி ஆணையர், கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை விசாரணையில் இறங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்த இடத்தை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் பார்வை இட்டார்...போலீஸாரால் சுடப்பட்டு இறந்த திருவேங்கடத்தின் உடலை நீதிபதி முன்னிலையில் ஸ்டான்லி மருத்துவ மனையில் உடல் கூராய்வு செய்யப்பட உள்ளது..
மாதவரம் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட புழல் காவல்துறையினர் இதுகுறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
Tags :