கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பீதி
கேரளாவின் காசர்கோடு மாவட்டம் மேற்கு எளேரி ஊராட்சி, ஈச்சிபொயிலில் உள்ள பன்றிப் பண்ணையில் பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டதை கால்நடை பராமரிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு நோயாகும். இதனால் மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நோய் பரவுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கையே இதன் அடிப்படையாகும். பன்றிகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்ய மூன்று மாதங்களுக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags :