தனியார் நிறுவன மேலாளர் இன் வீட்டு பூட்டை உடைத்து திருட்டு 80 சவரன் தங்க நகைகள் கொள்ளை

by Editor / 27-06-2022 11:30:19am
தனியார் நிறுவன மேலாளர் இன் வீட்டு பூட்டை உடைத்து திருட்டு 80 சவரன் தங்க நகைகள் கொள்ளை

 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் மினரல் நிறுவனத்தில் மேலாளராக ஆண்டேஸ்வரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரும் அவரது மனைவியும் சென்னை தனியார் கல்லூரியில் படித்து வரும் தனது மகனை பார்க்க சென்றுள்ளார்.
இந்தநிலையில், அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கு உணவு வைப்பதற்காக போனதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே பீரோவிலிருந்த பொருட்கள் கலைந்து சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து அவர் வீட்டு உரிமையாளருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்ததில், பீீரோவில் வைத்திருந்த 85 சவரன் நகை மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via