அரசியலுக்கு நிச்சயம் வருவேன் - சசிகலா பேசிய 4ஆவது ஆடியோ

by Editor / 02-06-2021 10:03:27am
அரசியலுக்கு நிச்சயம் வருவேன் - சசிகலா பேசிய 4ஆவது ஆடியோ

அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று தொண்டர்களிடம் சசிகலா பேசிய 4ஆவது ஆடியோ வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை முடிந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா கடந்த மார்ச் 3ஆம் தேதி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சசிகலா கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். குல தெய்வ கோவில் உட்பட பல இடங்களுக்கு சென்று வந்தது குறித்து செய்தி வெளியான வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அரசியல் நகர்வுகள் அனைத்தையும் கவனித்து வந்தார். இந்த சூழ்நிலையில்தான் தொண்டர் ஒருவர் சசிகலா உடன் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் நான் நிச்சயம் வருவேன் கட்சியை சரிசெய்துவிடலாம் என்று பேசும் சசிகலா, கொரோனா மிக மோசமாக இருப்பதால் கவனமுடன் இருக்குமாறு அவரது ஆதரவாளருக்கு அறிவுரை கூறினார்.

இந்த விவகாரம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு ஆடியோக்கள் வெளியானது. இந்நிலையில் 3ஆவது ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்த ராஜாரகுபதி என்பவருடன் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில் சசிகலா, "கவலைப்படாமல் இருங்கள் நிச்சயம் நான் வருவேன் என்றும், கட்சியை சரிசெய்துவிடலாம்" என்றும் கூறியிருக்கிறார். ஏற்கனவே அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இந்த ஆடியோ அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

 

Tags :

Share via