தினந்தோறும் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்த பெற்றோர்
மதுரையில் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோர் போலீசில் சரணடைந்தனர்.சொக்கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்ற இளைஞர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மதுப்பழக்கத்திற்கு ஆளாகி குடிப்பதற்கு பணம் கேட்டு தாய் தந்தையரிடம் தகராறு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது .வழக்கம்போல் நேற்று இரவு மதுபோதையில் பெற்றோரிடம் குடிக்க பணம் கேட்டு மாரிசெல்வம் தகராறு செய்த நிலையில் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை கொலை செய்து பின் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Tags :