10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த குற்றத்திற்காக 6 இளைஞர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த குற்றத்திற்காக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குடித்தபடி புகைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்களை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர் தலைமறைவாக உள்ள மேலும் 2 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :