கல்லூரிமாணவர் கடத்தல்-பெண் உள்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

by Admin / 06-04-2026 06:47:03pm
கல்லூரிமாணவர் கடத்தல்-பெண் உள்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

சென்னை மதுரா வயலில் தனியார் கல்லூரியில் பயந்து வந்த சட்டம் பயிலும் மாணவர் கடத்தப்பட்டார் சம்பவத்தில் நான்கு பேர் கைது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்துக் கொண்டு மதுராவயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். மாணவர் சசிகுமாருக்கும் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காதலித்து வந்த நிலையில் , சசிகுமார் கொடுத்த1.75.000 லட்சம் பணத்தை காதலி வேறு ஒருவரை காதலிக்க தொடங்கியதையடுத்து மாணவர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது புதிய காதலன் மூலம் அவருடைய நண்பர்களுடன்.சேர்ந்து. கோயம்பேடு அருகே சசிகுமாரை காரில் கடத்திச் சென்று செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு வீட்டில் வைத்து மாணவரை தாக்கி சித்திரவதை செய்து உள்ளனர். தப்பி வந்த மாணவர் கொடுத்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பவளமல்லி கேங் என்று அழைக்கப்படும் கும்பலைச் சேர்ந்த அந்த பெண் புதிய காதலன் உள்பட ஐந்து பேரை கைது செய்தனர்..இக்கடத்தல் சம்பவத்தின் பிண்ணனியில்  'பழிவாங்கும்' நடவடிக்கை இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் தொடர்பாகப் போலீஸார் விசாரணை நடத்தி, 'பவளமல்லி' கேங் என்ற பெயரில் செயல்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடித்துள்ளனர். 

 

Tags :

Share via

More stories

Logo