நேற்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 முதல் 15 பேர் வரை உயிரிழந்தனர்.
நேற்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 முதல் 15 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தரைவழிமற்றும் வான்வழி தாக்குதல்களின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த தாக்குதல்கள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன .ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் தளங்களை குறி வைப்பதாக இஸ்ரேல் கூறினாலும் பொதுமக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் காரணமாக லெவனானிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
Tags :



















