திருமணத்திற்கு மறுத்த மகள்... கத்தியால் குத்திய தாய்

by Staff / 11-11-2023 01:43:24pm
திருமணத்திற்கு மறுத்த மகள்... கத்தியால் குத்திய தாய்

ஆந்திர மாநிலத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எனக் கூறியதால், பெற்ற தாயே, 17 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோமளா(17) என்ற சிறுமி 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால், இந்த வயதில் எனக்கு திருமணம் வேண்டாம், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என தொடர்ந்து சிறுமி மறுத்து வந்துள்ளதால் ஆத்திரமடைந்த அவரது தாய், கத்தியால் சிறுமியை பலமுறை குத்தியுள்ளார். இதனையடுத்து, அச்சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் சிறுமியின் தாயை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via