2,000 ஆண்டுகளில் முதல்முறை வாக்களிக்கும் பெண்கள்
கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் வாடிகன் கூட்டத்தில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்று வாக்களிக்க உள்ளனர். உலக கத்தோலிக்க் கிறிஸ்தவர்களின் தலைவராக போப் ஆண்டவர் இருக்கிறார். இவர் போப் பிரான்சிஸ் என்றும் அழைக்கப்படுகிறார். வாடிகன் நகரின் தலைவர் இவரே. திருச்சபையின் 266வது போப் பிரான்சிஸ் தலைமையில் நடக்கும் இந்த 4 வாரக் கூட்டத்தில் திருச்சபையின் சீர்திருத்தங்கள், புதிய விதிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சுமார் 2,000 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த கூட்டத்தில் பெண்கள் பங்கேற்பது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
Tags :