எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

by Staff / 27-10-2023 01:19:47pm
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மனு அளித்தார். அந்த மனுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் நீடிக்க அனுமதிப்பதாகவும், 5 முறை இருக்கை மாற்றக்கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் நினைவூட்டல் கடிதம் வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஒரு எதிர்க்கட்சியாக திறமையாக செயல்பட முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via