சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் மக்கள்.

by Editor / 10-06-2024 10:00:44am
சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் மக்கள்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் நேற்று அதிகாலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஆனந்தராஜ் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் ஒரு அறையின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர்.  இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆனந்தராஜ் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் வசித்த போது மர்ம நபர்  வீட்டை உடைத்து எட்டு பவுன் நகை திருடியது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் தான் இரண்டாவது சம்பவமாக நேற்று திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில் அந்த ஜன்னல் கொள்ளையர்கள் அப்பகுதியில் உள்ள மேலும் மூன்று வீடுகளில் ஜன்னலை உடைத்து திருடன் முயற்சி செய்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலமாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  அந்த சிசிடிவி காட்சிகள் ஒரு நபர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஜன்னலை உடைத்து திருட பயிற்சி மேற்கொள்ளும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும் இருவர் ஓரத்தில் இருந்து வேவு பார்ப்பது போன்ற நிழல்களும் தெரிகின்றன. 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி மந்திதோப்பு சாலை முல்லை நகர் பகுதியில் விருப்ப பணி ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டிலும் இந்த ஜன்னல் கொள்ளையர்கள் ஜன்னலைப் பெயர்த்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஜன்னல் கொள்ளையர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியில் அதிக அளவு அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எனவே ஜன்னல் கொள்ளையர்களை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி,, கிருஷ்ணா நகர் பகுதியில் புற காவல் நிலைய அமைத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு கோரிக்கை வைத்துள்ளனர். 

கோவில்பட்டி நகரில் ஜன்னல் கொள்ளையர்கள் அட்டூழியம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த கொள்ளைகளுக்கு கைது செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Tags : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

Share via