கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்

by Editor / 10-06-2024 10:04:37am
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்

 தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கான பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது தற்போது கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 10ஆம் தேதி ஆன இன்று திறக்கப்படுகிறது.

இதையொட்டி தமிழகத்திலுள்ள அரசு பள்ளி, அரசு உதவிப் பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் என அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் உற்சாகமாக வருகை தந்தனர்.வருகை தந்த நிலையில் தங்களது சக நண்பர்களை கண்டு பேசி மகிழ்ந்தனர். மேலும் பள்ளிக்கு கோடை விடுமுறை முடிந்து வருகை தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நுழைவாயிலில் இருந்து இனிப்பு கொடுத்து பள்ளிக்கு வரவேற்றனர்.

 

Tags : கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்

Share via