மடிக்கணினி எப்போது வழங்கப்படும் மாணவியின் கேள்விக்கு முதலமைச்சர் பதில்
மடிக்கணினி எப்போது வழங்கப்படும் என்ற பள்ளி மாணவியின் கேள்விக்கு விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கடந்த கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு முடித்த 6 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு 323 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக சென்னை நுங்கம்பாக்கம் சென்னை மேல்நிலைப் பள்ளியில் 10 மாணவர்களுக்கு முதலமைச்சர் மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் முதலமைச்சர் மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ள சென்ற போது நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பத்மபிரியா முதல்வரிடம் மடிக்கணினி எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பிய நிலையில் விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் பதிலளித்தார்.
Tags :