இலங்கையில் சூறை காற்றுடன் கூடிய கனமழை பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

by Editor / 03-08-2022 01:57:03pm
இலங்கையில் சூறை காற்றுடன் கூடிய கனமழை பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

திடீரென ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது .பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை இயற்கை சீற்றத்தாலும் பாதிப்பை சந்தித்து வருகிறது. கொட்டி தீர்த்த கன மழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளன கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்து உள்ள நிலையில் 11,000 மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டதுடன் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

Tags :

Share via