கஞ்சா கடத்திய இருவர் கைது.

by Staff / 25-01-2023 04:45:59pm
கஞ்சா கடத்திய இருவர் கைது.

மதுரை நகர் கூடல்புதூர் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து ஈடுபட்டனர். அப்போது கூடல்நகர், இரயில் தண்டவாளம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் போலீசார் விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்க போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர்.அதில் 21 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.இவர்கள் அருள் தாஸ்புரம், பிள்ளையார் கோவில் தெரு நாய்போடு கணேசன் மகன் ஹரிஹரன் (22), சோழவந்தான் அருகில் உள்ள ஊத்துக்குளி ரமேஷ் மகன் விஜயேந்திரன்(23) என்பது தெரிய வந்தது. இருவரையும் கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via