திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

by Staff / 16-05-2024 03:10:52pm
 திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

டெல்லியில் வருகிற மே 21ஆம் தேதி அன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபறவுள்ளது. இதற்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு சார்பாக அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், “காவிரி தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகளை காணொலி மூலம் பங்கேற்க வைப்பதா? தமிழக உரிமைகளை கர்நாடகத்தில் திமுக அரசு அடமானம் வைத்துவிட்டது. இந்த கூட்டங்களில் அதிகாரிகள் நேரில் சென்று பங்கேற்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via