அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை

by Staff / 30-08-2023 05:25:12pm
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை

திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் மயக்கம் காரணமாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பினார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் எவ்வித அடைப்பும் இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை நடைப்பயிற்சி முடித்து விட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
 

 

Tags :

Share via