ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் அனைவரும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளின்படி அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப்பற்றையும் தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தேசியக்கொடியை இரவில் இரக்க வேண்டியதில்லை என்று மூன்று நாட்கள் பறக்கலாம் என்றும் அதற்காக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
Tags :