படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்களை பத்திரமாக மீட்ட கடலோர காவல்படை

by Editor / 09-08-2022 12:46:48pm
படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்களை பத்திரமாக மீட்ட கடலோர காவல்படை

குஜராத் மாநிலத்தில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். கடற்கரையில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த விசைப்படகு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் கரைசேர முடியாமல் படகின் நுனியைப் பிடித்துக் கொண்டு மீனவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

 

Tags :

Share via