சி.பி.ஐ. அமைப்பை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை... கெஜ்ரிவால்

by Editor / 19-08-2022 04:28:49pm
சி.பி.ஐ. அமைப்பை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை... கெஜ்ரிவால்

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ இன்று சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சி.பி.ஐ. தனது கடமையை செய்கிறது. பயப்பட வேண்டிய அவசியமில்லை. சி.பி.ஐ. தனது கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும். நம்மை துன்பப்படுத்த வேண்டும் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. தடைகள் வந்தாலும் நமது பணியை நிறுத்தமுடியாது என தெரிவித்தார்.

 

Tags :

Share via