நண்பர் வீட்டிலேயே திருடிய போலீஸ்
கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அமல்தேவ் கே.சதீசன் (35). இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். அமல்தேவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் உண்டு. ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான இவர், நாளடைவில் ரூ.30 லட்சத்தை இழந்து கடனாளியானார். மேலும், தனக்கு கிடைக்கும் பணம் முழுவதையும் இந்த விளையாட்டிலேயே இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கத் தொடங்கினர். இந்நிலையில் கடனை அடைக்க தனது நண்பர் வீட்டில் திருட திட்டமிட்டார். அதன்படி, கடந்த 16ம் தேதி அமல்தேவ் நண்பர் நடேசன் வீட்டில் இருந்து 10 பவுன் நகையை திருடி சென்றுள்ளார்.
Tags :