சேலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்..

by Admin / 30-07-2021 04:13:10pm
சேலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்..


.
சேலத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 300 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
 
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சேலம் அம்மாப்பேட்டை புறவழிச் சாலையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக இரு வாகனங்களில் வந்தவர்கள், போலீசாரைக் கண்டதும், வாகனங்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.

இதைத்தொடர்ந்து வாகனங்களில் போலீசார் சோதனை நடத்திய போது மாட்டுத்தீவன மூட்டைகளுக்குள் குட்கா பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 300 கிலோ குட்கா பொருட்களையும், வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டது யார், குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
இதேபோல், திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குடோனில் ஆய்வு செய்தனர். அப்போது 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார், குட்கா பதுக்கிய  பூமிநாதன், இளங்கோ, வடிவேல், ஹரிஹரன், பழனிக்குமார் ஆகிய 5 பேரை  கைது செய்தனர்.

 

Tags :

Share via