ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்பு பணியை முடித்துக்கொண்ட இங்கிலாந்து அரசு… அனைவரையும் மீட்க முடியவில்லை என வருத்தம்!  

by Admin / 29-08-2021 06:04:19pm
ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்பு பணியை முடித்துக்கொண்ட இங்கிலாந்து அரசு… அனைவரையும் மீட்க முடியவில்லை என வருத்தம்!  


 
ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்பு பணியை முடித்துக்கொண்ட இங்கிலாந்து அரசு, அனைவரையும் மீட்க முடியாமல் போய் விட்டதாக கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்தநிலையில் இங்கிலாந்து மக்கள் மற்றும் தகுதியுடைய ஆப்கானிஸ்தானியர்களை மீட்க இங்கிலாந்து ராணுவம் அங்கு முகாமிட்டிருந்தது.
 
தற்போது அங்கு நிலைமை மோசமாகி வருவதாலும், அமெரிக்க துருப்புக்களின் காலக்கெடு ஆகஸ்ட் 31-வுடன் முடியவுள்ளதாலும், இங்கிலாந்து முன்னெச்சரிக்கையாக மீட்பு பணியை விரைந்து முடித்துள்ளது. அங்கிருந்து இங்கிலாந்து மக்களை முழுமையாக மீட்ட ராணுவ வீரர்களை ஹீரோக்கள் என வாழ்த்திய பிரதமர் போரிஸ் ஜான்சன், தகுதி வாய்ந்த ஆப்கானியர்களை மீட்க முடியாமல் போய்விட்டதாக கவலை தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via