ஜெயலலிதா நினைவிடத்தில் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி
அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் நிலவி வரும் சூழலில், அதிமுக MLA எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஆதரவாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
Tags :



















