கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 28-01-2023 12:46:13pm
கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விநாயக முருகன் மனைவி சுசீலா (29). இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு விநாயக முருகன் இறந்துவிட்டார். கணவர் இறந்தது முதல் சுசீலா மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தாய் ராஜாத்தி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.
 

 

Tags :

Share via