12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உண்மை மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது

by Admin / 31-07-2023 10:11:55am
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உண்மை மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது

கடந்த 20223 கல்வி ஆண்டில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உண்மை மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது. 2022 2023 கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்தது. இப்போது தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி இருந்த நிலையில் ஏப்ரல் விடைத்தாள் திருத்தப்பட்டு, மே மாதம் 12ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், உயர்கல்வியில் சேர்வதற்காக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவர்களுக்கு உண்மை மதிப்பெண் சான்றிதழை வழங்க தமிழ்நாடு கல்வி தேர்வுத்துறை ஆணையிட்டுள்ளது... மாணவர்கள் அவரவர்களுடைய பள்ளிகளில் உண்மை சான்றிதழை பெற்றுக் கொள்ள மாறும் தனி தேர்வர்கள் தாங்கள் எழுதிய தேர்வு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

 

Tags :

Share via