கண்ணிமைக்கும் நேரத்தில் தரைமட்டமான 4 அடுக்கு மாடி கட்டடம்

by Editor / 19-08-2022 04:39:18pm
கண்ணிமைக்கும் நேரத்தில் தரைமட்டமான 4 அடுக்கு மாடி கட்டடம்

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள போரிவலியில் மிகவும் பழமையான 4 அடுக்குமாடி கட்டடம் ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன் இந்தக் கட்டடத்தில் வசித்தவர்களை மாநகராட்சி அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றினர். பிறகு இந்தக் கட்டடம் பாழடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்தக் 4 அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தில் தரைமட்டாகியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மொத்த கட்டடமும் இடிந்து விழுந்து சுக்குநூறாகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த பொது மக்கள் அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர்.

 

Tags :

Share via