ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

by Staff / 03-08-2024 01:59:40pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி பிரிவு அருகே பைக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் மீது கார் மோதிய விபத்தில் ஜார்ஜ், அருணா தம்பதி மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர் .

 

Tags :

Share via