முதியவர் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 22-11-2022 11:36:22am
முதியவர் விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை நாரந்திவிளையை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது64). இவர் மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதை அவரது குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த தனிஸ்லாஸ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.அவரை உறவினர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

 

Tags :

Share via