சத்துணவு மையங்களை மூடும் திட்டம் இல்லை
தமிழகத்தில் சத்துணவு மையங்களை தமிழக அரசு மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் அந்த செய்தி உண்மையில்லை என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காலை உணவுத் திட்டம் முதல்வர் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும்போது எப்படி சத்துணவு மையங்களை மூட முடியும் சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் குறித்து புள்ளி விவரங்கள் கோரப்பட்டுள்ளது என கூறினார்.
Tags :