மாணவர் தற்கொலை.. உறவினர்கள் போராட்டம்

by Staff / 01-03-2023 11:50:50am
மாணவர் தற்கொலை.. உறவினர்கள் போராட்டம்

ஹைதராபாத் புறநகர் பகுதியான நர்சிங்கியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஸ்ரீ சைதன்யா கல்லூரி மாணவர் சாத்விக் என்பவர் வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, கல்லூரி நிர்வாகத்தின் தொல்லைதான் தற்கொலைக்கு காரணம் எனக்கூறி குடும்பத்தினர் நர்சிங்கி மெயின்ரோட்டில் உள்ள கல்லூரி வளாகத்தில் மறியல் செய்தனர். நீதி கேட்டு சாலையில் அமர்ந்தனர். அவர்களை சமாதானம் செய்ய போலீசார் முயற்சிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 

Tags :

Share via