பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 25-11-2023 04:29:35pm
பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் தனுஸ்ரீ இவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு போடிநாயக்கனூரை சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவரிடம் திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் தனுஸ்ரீ நீண்ட நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார் தனுஸ்ரீ வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர் இது குறித்து தனுஸ்ரீ தந்தை காந்தி பன் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அடிப்படையில் மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via