கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு

by Admin / 30-10-2021 07:51:13pm
கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு

கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு

       பெண்களின் ஆரோக்கியத்தை பொறுத்தே பிறக்கும்  குழந்தையும் நலமுடன் இருக்கும்கருவுற்றிருக்கும் பெண்கள் தனக்காக மட்டுமின்றி தம் வயிற்றில் வளரும் இன்னொரு ஜீவனுக்காகவும் சாப்பிட வேண்டிய கடமை உள்ளது.

       பெண் தன் வயிற்றுப் பசியைப் போக்கி, தம் உயிரைத் தக்க வைக்கவும் உடல் ஆற்றலோடு இயங்குவதற்குமாகச் சாப்பிட வேண்டிய அவசியம்.. ஆனால், கற்பமுற்றிருக்கும் பெண்ணோ இதைத் தாண்டிஇன்னொரு உயிரை மெல்ல மெல்ல ரத்தமும் சதையும் கலந்த ஓர் உருவமாக வடிவமைத்துத் தர வேண்டிய நிலையில் இருப்பவர்அதனால், இரட்டை உயிருக்கான உணவு…. சத்தானதாகஆரோக்கியம் தரத்தக்கதான உணவை உண்டு உடல் நலம் பேண வேண்டியது அவசியமாகிறது.

       பெண் கருவுற்றது அறிந்ததும் கொண்டாடும் குடும்பம்….கூடவே, பல கட்டுப்பாடுகளை நடைமுறை செயப்பாடுகளை அறிவிக்கும்..எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை முழுமையாக வளரவே

  1. மல்லாந்து அல்லது குப்புறப் படுக்க கூடாது. ஒருகணித்து இடதுகையை தலைக்கு வைத்துப்படுக்க வேண்டும்.
  2. தலைவலிகாய்ச்சல் வந்தால் மாத்திரை எடுத்துக் கொள்ளச் கூடாது. தைலம், கசாயம் பயன்படுத்த வேண்டும்.
  3. வாந்தி அடிக்கடி வரும் சாப்பிட்ட அத்துணையும் குமட்டிக் கொண்டு வெளியே கொட்ட வேண்டிருக்கும்…. அப்பொழுது ஆல்பக்கோடாவை மெல்ல மென்று கொண்டிருந்தால் வாந்தி வராது என்று சொல்லுவார்கள்….
  4. கறுப்புத் திராட்சை பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது என்ற நிபந்தனை ஆலோசனை வழங்கப்படும்.
  5. வயிற்றுக்குள்ளிருக்கும் சிசுவிற்குச் சளி பிடிக்குமாறு குளிர்ந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என அன்பு ஆணையிடப்படும்….

      பிறகென்ன நாட்டுமருந்துக் கடைகளிலிருந்து வாங்கிவரப்படும் பத்திய பொருள்களைக் கொண்டு சமைக்கப்படும் குழம்புகூட்டு உணவாக வழங்கப்படும்….

      இது உடம்புக்கு ஆரோக்கியத்தோடுநோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டக் கூடியதாக இருக்கும்

      பாலில் குங்குமப்பூ கலந்து குடித்தால் சிவப்பாகக் குழந்தை பிறக்கும் என்று எண்ணம் எப்படி உள்ளதோ அதேபோல் பால்சேராத டிக்காஷன் தேனீரோகாப்பியோ அருந்த கூடாது என்று அறிவுறுத்தப்படுவார்

       பலாப்பழம், நாற்பழம், பச்சை வாழைப்பழம்சாப்பிட்டால் உடல்சூடு இல்லை குளிர்ச்சி….. சளிப்பிடித்தால் ஏற்படலாம்என்று அதை உண்பதை தவிர்க்குமாறு செய்வர்இப்படியாகக் கருவுற்றிருக்கும் பெண்களுக்கான உடல் நலன்; ஆரோக்கியம் சார்ந்த விசயங்கள் வீட்டுக்குள்ளே கடைபிடிக்க அம்மாக்களும் உறவுகளும் சொல்லிக் கொடுத்தாலும் இன்றைக்கு பெரும்பான்மையான குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிசேரியன் அடிப்படையிலே பிறக்கின்றன

       கருவுற்ற பெண்கள் இன்று வேலை செய்வதைப் பெற்றோர்களே விரும்புவதில்லை. சின்னச் சின்ன வீட்டுவேலைகள் செய்தாலே போதும் சிசேரியனைத் தவிர்க்கலாம்

       நல்ல உணவு, தூக்கம், நடை பயிற்சி, சின்னச்சின்ன வேலைகள் என்று செய்தாலே சுகப்பிரசவம் ஏற்படும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இன்று நல்ல நாள், ராசி, பார்த்து வலி வருவதற்கு முன்பே சிசேரியன் அடிப்படையில் குழந்தையை வயிற்றிலிருந்து எடுத்து விடுகிறார்கள்

       பெரும்பான்மை குழந்தைகள் பிறப்பதில்லைஎடுக்கத்தான் படுகின்றன என்கிற வேதனை குரல் நம்மிடம் ஒலிக்கத்தான் செய்கின்றன….

       பிரசவவலி வந்து ஒருபெண் குழந்தை பெற வேண்டும் என்பதுதான் இயற்கை விதிஅப்பொழுது தான் அவளின் பத்து மாதச் சுமையின் வலி கலந்த சுகம் இயல்பாக ஏற்படும்..தூங்க வைத்துசுய நினைவற்ற நிலையிலேயே குழந்தைகளை நாம் பூமிக்குக் கொண்டு வருகிறோம்.. குழந்தையின் முதல் அழுகுரலை இன்றைய தலைமுறை எத்தனை தாய்மார்கள் கேட்டிருப்பார்கள்யோசித்துப் பாருங்கள்

       இயற்கையின் ஆற்றலுக்கு மனித சமூகம் இயங்குவது சிறப்புஅப்பொழுது தான் அது வழங்கிய, வழங்கும் பேறுகளையும் ரகசியங்களையும் அனுபவிக்க முடியும். ஆனால், நாம் அதை கண்மூடித்தனமாக புறக்கணிக்கிறோம். புறக்கணித்து வருகிறோம்

       குழந்தை பெறப்போகும் பெண் உடல்நலம், மன நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது…..

       உடல் நலத்துடன் இருக்க இரும்புச்சத்து, கால்சியம் போலிக் அமில உணவு வகைகளை உண்பது மூலம் ஆரோக்கியமாகத் திகழலாம்.. அதற்கு இரும்புச் சத்தான உணவு பெண்களுக்கு எப்பொழுதும் அவசியம்பிரசவகாலத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் என்பதால் இரும்புச்சத்து இருக்கக் கூடிய முட்டை, கோழிக்கறி, மீன், நண்டு, பைனாப்பிள் (அன்னாசிப் பழம்), தக்காளி, பாகற்காய், பீர்க்கங்காய்,

முருங்கை காய், பீன்ஸ், பூசணி, பீட்ரூட், முட்டைக் கோஸ், கேரட், முள்ளங்கி, காலிபிளவர் போன்ற இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்துடன் குழந்தையின் எலும்பு வளர்ச்சி சதை வளர்ச்சி, ஹார்மோன் செயல்பாடுகளுக்காக கீரைகள், வெண்டைக்காய், பூண்டு, பீன்ஸ், உருளைக்கிழங்கு, சோயா, குடை மிளகாய், பால், வெங்காயத்தண்டு, பால் முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் அதேநேரம் போலிக் அமிலச் சுரப்புக்காக எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, முந்திரி, பாதாம், பருப்பு வகைகள் பச்சை பட்டாணி, பீட்ரூட் போன்ற போலிக் அமிலம் சுரக்க கூடிய உணவு வகைகள் உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்

        அதேநேரம் கருவுற்றிருகும் பெண்கள் மனதை தேவை இல்லாத விசயங்களில் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தம், கோபம், பழி உணர்ச்சி, பொறாமை போன்ற குணங்கள் தலை தூக்காமல் மனதை தெளிவாக வைத்திருந்தால் பிறக்கும் குழந்தை மன நலம் சிறப்பாக இருக்கும்பாட்டுக் கேட்பது, படிப்பது இறை வழிபாடு நிகழ்த்துவது என்று நல்ல விசயங்களில் அக்கறை செலுத்த வேண்டும்அப்பொழுதுதான் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெறுவதுடன்குழந்தை பெறும் பெண்களும் உடல் நலத்துடன் நல்ல மனத்துடன் இருக்க முடியும்.

 

Tags :

Share via