கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் ஆலுவா மகாதேவா ஆலயத்தில் சூழ்ந்த வெள்ளநீர்

கேரளா மாநிலம் கொச்சியில் கனமழை காரணமாக பெரியாரின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து மகாதேவா கோவில் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பாயும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பெரியாறு நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மகாதேவா ஆலயத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது அனைத்து இடங்களில் நீரில் சூழ்ந்து காணப்படுகிறது.
Tags :