200 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.

by Staff / 10-09-2023 01:39:43pm
 200 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.

மதுரை- திருநெல்வேலி நான்கு வழி சாலை, சீனிவாச காலனி பகுதியில் நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சரக்கு லாரியில் 200 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது கஞ்சாவை கடத்தி வந்த மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் செக்கான் கோவில்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயகுமார், (45) லாரி ஓட்டுனரான திருப்பத்தூர் வாணியம்பாடியை சேர்ந்த முகமது பாசில் மகன் சமில் அகமது (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர்200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரி மற்றும் செல்போன் பறிமுதல் செய்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via