தற்கொலைக்கு முயன்ற சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த கொடூரன் கைது

by Editor / 27-08-2022 10:58:13am
தற்கொலைக்கு முயன்ற சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த கொடூரன் கைது

சென்னை ஆவடி, பட்டாபிராம், பாரதியார் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமிக்கு படிக்க விருப்பம் இல்லாமல் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்போது தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, முடிச்சு அவிழ்ந்து கயிறு அறுந்துள்ளது. இதனால் கோபமடைந்த சிறுமி, நீர்நிலைகளில் குதித்து தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில், வீட்டை விட்டு வெளியேறி அழுதுகொண்டே சென்றுள்ளார். அதை கண்ட வாலிபர் ஒருவர் சிறுமியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்று, வெள்ளவேடு பகுதியில் உள்ள வாட்டர் கம்பெனி பின்புறம், முட்புதரில் வைத்து, சிறுமியை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து தப்பி ஓடி வந்த சிறுமியை பெண் ஒருவர் மீட்டு, வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அந்த சிறுமி நடந்த விஷயத்தை கூறினார். இதனையடுத்து விசாரணையில் ராமகிருஷ்ணன் (38) என்பவரை பிடித்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via