ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

by Staff / 21-04-2023 05:21:55pm
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ஊஞ்சலூர் ரெயில் நிலையத்துக்கும், பாசூர் ரெயில் நிலையத்துக்கும் இடைபட்ட தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், சம்பவ இடத்தில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மயிலாடுதுறை- மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அந்த வாலிபர் இறந்தது தெரியவந்தது. ஆனால் இறந்தவர் யார்? , எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via