விவாகரத்து பெற்ற தொழிலதிபரை பணம் கேட்டு மிரட்டிய புள்ளிகள் கைது.

by Editor / 22-07-2024 08:13:49am
விவாகரத்து பெற்ற தொழிலதிபரை பணம் கேட்டு மிரட்டிய புள்ளிகள் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரங்கக்குடியில் வசித்து வரும் தொழிலதிபர் ஹிதயத்துல்லா என்பவரது 3வது மகன் ரிஸ்வான்- ரமீஸ் பர்வீன் தம்பதியினர் மனகசப்பால் அமெரிக்க நாட்டு நீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று அரங்கக்குடி ஜமாத்தார்கள் முன்னிலையில் விவாகரத்து பெற்ற நிலையில் மயிலாடுதுறை அருகே நீடூரில் வசிக்கும் இக்காமா சாதிக் பாட்ஷா மற்றும் அவரது நண்பர் சென்னை மயிலாப்பூர் அயூப் கான் ஆகிய இருவரும் ரிஸ்வான்வசம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.அவரது புகாரைத்தொடர்ந்து  செம்பனார்கோவில் போலீசார் கைது செய்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  இக்காமா சாதிக் பாட்ஷா பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாக அவரது வீட்டில் 2022 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இக்காமா சாதிக் பாட்ஷா மீது கொலை முயற்சி, வழிப்பறி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையிலுள்ளது.

 

Tags : விவாகரத்து பெற்ற தொழிலதிபரை பணம் கேட்டு மிரட்டிய புள்ளிகள் கைது.

Share via