சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம்

by Editor / 22-06-2021 09:44:23am
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இன்றும், நாளையும், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பேசி முடித்த பிறகு, வரும் 24-ம் தேதி விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் உரையாற்றுவார்.

இன்று அவை தொடங்கியதும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யாவாண்டையார், டி.எம். காளியண்ணன், நடிகர் விவேக் ஆகியோரின் மறைவு குறித்தும் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

 

Tags :

Share via