செல்ஃபி எடுத்துக்கொண்டே தற்கொலை

by Staff / 06-12-2022 04:06:09pm
செல்ஃபி எடுத்துக்கொண்டே தற்கொலை

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சோகம் அரங்கேறியுள்ளது. ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்டே தற்கொலை செய்து கொண்டார். டிஆர்எஸ் கட்சியின் சித்திப்பேட்டை கவுன்சிலர் பிரவீனின் நடத்தையால் விரக்தியடைந்த ரமேஷ் (சாகர்) என்பவர், செல்பி வீடியோ எடுத்தவாறு விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார்.

அரசு திட்டத்தின் கீழ், 4 முறை தனக்கு இரட்டை படுக்கையறை கொண்ட வீடு வழங்கப்பட்டும், கவுன்சிலர் வேண்டுமென்றே தடுத்ததாக தற்கொலை செய்த இளைஞர் ரமேஷ் (சாகர்) புகார் கூறினார்.
விஷக்கொல்லி மருந்தை குடித்து லைவ் வீடியோ எடுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

 

Tags :

Share via