அடிக்கடி சண்டையிட்ட கணவனுக்கு புகைப்படம் அனுப்பி ஷாக் கொடுத்த மனைவி-

by Editor / 28-08-2022 10:14:50am
அடிக்கடி சண்டையிட்ட கணவனுக்கு புகைப்படம் அனுப்பி ஷாக் கொடுத்த மனைவி-

திண்டுக்கல் மாவட்டம், வட மதுரை அருகே உள்ள எட்டிக்குளத்துபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும்  வீரழகு என்ற பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இந்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லாததால் அடிக்கடி கணவன்,மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து வீரழகு கணவனிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தனியார் கம்பெனிக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன் ஆனந்தின் செல்போன் வாட்ஸ் அப்பிற்கு மனைவி வீரழகு ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தில் வீரழகு மாலையும் கழுத்துமாக வேறு ஒருவரோடு திருமணம் செய்து கொண்டபடத்தை அனுப்பியுள்ளார்.அந்தப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்ஆனந்த். மேலும்,தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும்,இனிமேல் தன்னைத் தேடி வர வேண்டாம் எனவும் வீரழகு  பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து ஆனந்த்  அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து தனது மனைவியை மீட்டுத்தரும்படி ஆனந்த் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 

Tags : கணவனுக்கு புகைப்படம் அனுப்பி ஷாக் கொடுத்த மனைவி

Share via